தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, நாளை மறுநாள் (செப்டம்பர் 15) முதல் “கலைஞர் மகளிர் திட்டம்” செயல்பட உள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த 1.63 கோடி பேரில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை எவ்வித இடையூறும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி தகுதியானவர்களின் வங்கி கணக்கில் 1 ரூபாய் சோதனை அடிப்படையில் கிரெடிட் செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம் தகுதியானவர்கள் யார்? யார்? என்பதை உறுதி படுத்திக் கொள்ளலாம் எனவும் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, அதற்குரிய காரணங்கள் நாளை மறுநாள் (செப்டம்பர் 15) குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டு போட்டிகள்: நேரடியாக காலிறுதிக்கு தயாராகும் இந்திய படை…, முழு அட்டவணை உள்ளே!!