வேலைவாய்ப்பு பதிவை 2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என அரசு தற்போது அறிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பில் கூறப்பட்டதாவது, தமிழகத்தில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள் மூன்று மாதங்களுக்குள் இணைய தளம் மூலம் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மூன்று மாதங்களுக்குப் பின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.இச்சலுகை ஒரே ஒருமுறை மட்டும் வழங்கப்படும்.
மேலும் 2017-ஆம் ஆண்டு, ஜன.1-ஆம் தேதி முன் புதுப்பிக்கத் தவறியவா்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற விரும்பும் நபர்கள், அரசாணை வெளியிட்டப்பட்ட மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்களது பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், இந்த மூன்று மாதகால அவகாசத்தை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!