பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளாக மின்சாரம் மாறியுள்ளதால், பலரும் புதிய மின் இணைப்பு வழங்க ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து 30 நாட்களுக்குள் மின் இணைப்புகளை மின்வாரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். இதே கம்பமோ, டிரான்ஸ்பர்மரோ நிறுவ வேண்டுமெனில் 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இதுவரை புதிய மின் இணைப்புகளுக்காக 2 லட்சம் விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டுள்ளன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்களுக்கு உரிய காரணங்களை கூறாமல் மின்வாரிய அதிகாரிகள் இணைப்பை வழங்க தாமதப்படுத்தி வருகின்றனர் என விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். அதேபோல் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகாரில் அரசு தலையிட்டு சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெண்களுக்கு இத்திட்டம் பயனளிக்கவில்லை.., உண்மையை உடைத்த அதிகாரிகள்.., வெளியான தகவல்!!