ஐடிஐ எனப்படும் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு இனி மின்வாரிய துறையில் வேலைவாங்கப்பட மாட்டாது என்று தமிழக மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. இந்த முடிவால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் மின்வாரியம்:
தமிழகத்தில் மிக பெரிய துறையாக மின்வாரியம் செயல்பட்டு வருகின்றது. பல ஊழியர்கள் பணியாற்றி வரும் இந்த துறையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடும். அதில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பணிகளை பெறுவர். இப்படியான நிலையில் தமிழகத்தை கடந்த மாதம் “நிவர்” புயல் தாக்கியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த புயல் காரணமாக அரசு சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனாலும், அந்த புயல் சில பாதிப்புகளை ஏற்படுத்தியது. மின்வாரிய துறைக்கு மட்டுமே 1.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதே போல் தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களில் ஆள் பற்றாக்குறை வேறு ஏற்பட்டது. இதனை சரி செய்ய மின்வாரியம் இடைக்கால நிவாரணமாக தனியாருக்கு வழங்கப்பட்டது. பணியாளர்கள் நியமிக்கப்பட்டு முடிந்ததும் மின்வாரியத்துறைக்கு உரிமைகள் வந்து விடும். தமிழகத்தில் உள்ள மின்வாரிய துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!!
இப்படியான நிலையில் இன்று மின்வாரியம் அதிர்ச்சிகாரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், இனி ஐடிஐ எனப்படும் தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் 3 ஆண்டுகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து கொள்ள தனியாருக்கு மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது.