மின் கட்டணம் செலுத்த புதிய நடைமுறை., காலக்கெடுவுடன் அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

0
மின் கட்டணம் செலுத்த புதிய நடைமுறை., காலக்கெடுவுடன் அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்பு பயனர்கள், தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முக்கிய கண்டிஷன் ஒன்றை மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில், மின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. உயர்த்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் தற்போது மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின் இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள் மற்றும் இலவச மின்சாரம் பெரும் பயனர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அரசு அறிவித்திருந்தது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இவ்வளவு பெரிய அப்டேட்டா? இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்!!

மின் கட்டணத்தில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க இந்த முறையை பின்பற்றுவதாக அரசு விளக்கம் அளித்தது. தற்போது இந்த இணைப்பை பொதுமக்கள், சுலபமாக செய்து முடிக்க வருகிற நவம்பர் 28ஆம் தேதி முதல், டிசம்பர் 31 வரை மின்வாரிய அலுவலகங்களில் இலவச சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுவரை, அதாவது டிசம்பர் 31 வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் படி மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here