தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட இந்த மாவட்டத்தில் மட்டும், வருகிற டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை :
தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் தினம் அல்லது திருவிழாக்கள் போன்ற காலங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது மரபு.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த விழா கொடியேற்றத்துடன் கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, மலையில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு, அடுத்த வாரம் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, இந்த விழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பக்தர்கள் வெள்ளத்தில் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
ரயில்ல ஊருக்கு போறீங்களா? உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்! முக்கிய ரயில்கள் திடீர் ரத்து!!
இதனை கருத்தில் கொண்டு வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்ட, மற்றொரு நாள் வேலை நாளாக அனுசரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.