5 மாவட்டங்களில் களமிறங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு .,, முதல்வரின் உத்தரவு!!

0
5 மாவட்டங்களில் களமிறங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு .,, முதல்வரின் உத்தரவு!!
5 மாவட்டங்களில் களமிறங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு .,, முதல்வரின் உத்தரவு!!

தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கியுள்ளனர்.

கனமழை:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் – இனி உட்கார்ந்த இடத்திலேயே முடிச்சிடலாம்! சூப்பர் வசதி அறிமுகம்!!

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த உத்தரவின் பேரில், சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் ஐந்து குழுக்கள் முகாம் அமைக்க உள்ளனர். மேலும் கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here