தமிழகத்தில் தென்னை விவசாயிகள் அனுபவித்துவரும் சிரமங்களை குறைக்க, ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வலுக்கும் கோரிக்கை :
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னை விவசாயிகளை பாதுகாக்க நல வாரியம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழக சுற்றுச்சூழல் அணி, அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதாவது தென்னை மஞ்சி மற்றும் தேங்காய் விலை குறைவு காரணமாக, தென்னை விவசாயிகள் பல பிரச்சனையை அனுபவித்து வருவதாகவும், அவர்களுக்காக மீண்டும் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது போக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்கள் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில், இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்