ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக அமைச்சர் வெளியிட்ட தகவல் !!!

0
நாட்டில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அதிபர் அதிகாரப்பூர்வ உத்தரவு! பதற்றத்தில் மக்கள்!!
நாட்டில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அதிபர் அதிகாரப்பூர்வ உத்தரவு! பதற்றத்தில் மக்கள்!!

தமிழகத்தில் அடுத்து ஊரடங்கு நீடிக்கப்படுமா?? என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வேளையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்பு புதுப் புது உச்சங்களை எட்டிவந்த நிலையில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஊரடங்கை அமல்படுத்தினார். அதற்கு பின் பாதிப்பு எண்ணிக்கையில் சிறிய அளவில் சரிவு காணப்படுகிறது. மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று  காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் கொரோனா பரவல் மேலும் பரவாமல் தடுப்பது மற்றும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள  6 மாவட்டங்களில் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. ஏற்கனவே முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேவை ஏற்பட்டால், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கூறியிருந்தார்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்த உத்தரவு இன்று வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ் நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here