தமிழக பள்ளி மாணவர்களுக்காக அமலாகும் அதிரடி திட்டம் – அரசாணையில் கையெழுத்திட்ட முதல்வர்!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்காக அமலாகும் அதிரடி திட்டம் - அரசாணையில் கையெழுத்திட்ட முதல்வர்!!

தமிழகத்தில் 1 முதல் 5ம்  வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தின் அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதல்வர் கையெழுத்து:

தமிழகத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டம், அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. மேலும், மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கான கருத்து கேட்பு நடந்து வருவதாகவும் விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்தது.

தற்போது, மாணவர்களின் காலை சிற்றுண்டி திட்டத்தின் அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த தகவலை தெரிவித்த முதல்வர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்து விட்டால் படிப்பு வந்து விடும் என்றும், காலை உணவை மாணவர்கள் யாரும் தவிர்க்க கூடாது எனவும் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here