தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாட கூடாது.. முதலவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்!!!

0

தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைகள் ஆய்வுகள் மேற்கொண்டு வந்த நிலையில், வரும் ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை  நீடித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஒரு வார ஊரடங்கால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் உணவில்லாமல் தவிக்கக்கூடிய பசியால் வாடக்கூடிய மக்களுக்கு திமுகவினர் தேடி சென்று உணவு வழங்க வேண்டும் என்று அக்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விடுத்து பசியினை போக்கும் நடவடிக்கைளில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளார். தமிழக அளவிலும் குறிப்பாக கோவை,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here