காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் – தமிழகத்தில் பரபரப்பு!!

0
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - தமிழகத்தில் பரபரப்பு!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 12ஆம் தேதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்த  நிலையில், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் - அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

இதையடுத்து,  தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிடி ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில்,  தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த செய்தி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஸ்டாலின் உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here