தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

0
cmo of tamilnadu
cmo of tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு கொரோனா பாதிப்பை தடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதுவரை மார்ச் 24ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 4 மாதங்களை தாண்டி பொதுமக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் வருமானம் இன்றி வறுமையின் விளிம்பிற்கே சென்று விட்டனர்.

தமிழகத்தில் அன்லாக் 2.0 வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இன்னும் 4 நாட்களில் இது முடிவடைய உள்ள நிலையில் அடுத்தபடியாக ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்படலாமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படவே அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 29ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here