
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிநவீன சிசிடிவி கேமரா மூலம் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு மின்னணு முறையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னையில் வாகனங்கள் வேகக்கட்டுப்பாட்டை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி சென்னையில் உள்ள சாலைகளில் இருசக்கர வாகனம் 50 கி.மீ. வேகத்திற்குள்ளும், கார் 60 கி.மீ. வேகத்திற்குள்ளும், ஆட்டோ 40 கி.மீ. வேகத்திற்குள்ளும் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ. வேகத்திற்குள் மட்டுமே செல்ல வேண்டும். இந்த வேகக்கட்டுப்பாடு இன்று (நவம்பர் 4) முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.