சென்னை விமான நிலையத்தில், இரண்டு புதிய ஏஜென்சிகள் மூலமாக 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக, நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு :
சென்னை விமான நிலையத்திலிருந்து, உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. இந்த சேவையை 46,000க்கும் மேற்பட்ட பயணிகள், பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பண்டிகை போன்ற முக்கிய நாட்களில் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது போன்ற நேரங்களில், பயணிகளை சமாளிக்க முடியாமல் விமான நிலைய அதிகாரிகள் திணறுகின்றனர். பயணிகளின் உடைமைகளை கையாள்வது, அவர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளில் தாமதம் ஏற்படுவதால் கூட்டம் அலைமோதும் சூழல் உருவாகிறது.
இதனை தடுப்பதற்காக, 2 ஏஜென்சிகள் மூலமாக விமான நிலையத்தில் கூடுதலாக 4000 பேரை பணியமர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புகளை முடித்து அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள், கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள், முற்றிலும் இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.