நாடு முழுவதும் நடைபெற்று வரும், 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்டவைகளின் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
இனி நடிக்கப்போவதில்லை., சினிமாவை மொத்தமாக துறந்த அமீர் கான் – திடுக்கிடும் காரணம் இதோ!
கட்டண உயர்வு:
மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் உள்ள ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தன. அந்த வகையில், இன்று காலை முதல் நாடு முழுவதும் இந்த பந்த் தொடங்கியது. இதனால், தமிழகத்தில் இன்று காலை 67% பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், பொது போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
இதையடுத்து, சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் இயங்கி வந்த ஆட்டோ மற்றும் கால் டாக்ஸியின் கட்டணம் இருமடங்கு உயர்ந்தது. உதாரணமாக, சென்னை சென்ட்ரலிலிருந்து சூளைமேடு வருவதற்கு ஆட்டோக்களில் வழக்கமாக 150 ரூபாய் பெறப்பட்டு வந்த நிலையில், இன்று 300 முதல் 400 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்