தமிழகத்தில், ஆட்டோ கட்டணத்தை இனி எரி பொருட்களான பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தே நிர்ணயிக்க வேண்டும் என்ற வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் உத்தரவு :
தமிழகத்தில் போக்குவரத்து சேவைக்காக, மக்கள் பேருந்துகளுக்கு அடுத்து ஆட்டோ சேவையையே அதிகம் நம்புகின்றனர். இந்த நிலையில், இந்த ஆட்டோ கட்டணம் சில நேரங்களில் சில ஓட்டுனர்களால் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2015ல், ஆட்டோகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பிறகு 7 ஆண்டுகளாக, இந்த கட்டணம் இதுவரை உயர்த்தப்படவில்லை. இதையடுத்து மீண்டும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில், ஆட்டோவுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொறுத்து கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும், ஓட்டுனர்களே இந்த இந்தக் கட்டணத்தை மின்னணு மீட்டர்களில் தாமாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டது. இந்த வழக்கில், தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.