தமிழகத்தின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த புதிய உத்தரவை உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பின், கல்வி நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்பட்டு, வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ ஆசிரியர்களாக பணிபுரியும், பணியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அரசாணை 56 இன் படி தகுதி வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது ஒரு புறம் இருக்க, கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது வெளியிட்டுள்ளார்.
அதாவது, கல்லூரி கௌரவ பேராசிரியர்களுக்கு என்று தனியாக தேர்வு நடத்த முடியாது என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டி தேர்வுகளை மட்டுமே அவர்களும் எழுத முடியும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு, கல்லூரி கௌரவ ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.