தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், தானியங்கி நாப்கின் மிஷினை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முக்கிய பரிந்துரை :
தமிழகத்தில் உள்ள அனைத்து வளர் இளம் பருவ பள்ளி மாணவிகளுக்கும் அரசின் சார்பாக, சானிடரி நாப்கின் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை கல்லூரிகளிலும் விரிவுபடுத்த, பல மாநில அரசுகள் முடிவு செய்தது. இது போக மத்திய அரசின் சார்பாக அனைத்து கல்லூரிகளிலும், மாணவிகளுக்கு இந்த இலவச சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், தானியங்கி நாப்கின் இயந்திரங்களை அமைப்பது குறித்து, அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து நடைபெற்ற வழக்கில், யுஜிசி தலைவர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். விரைவில் அவரிடம், இது பற்றிய அறிக்கை கேட்கப்பட உள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.