தமிழக அரசுடன் இணைந்து போக்குவரத்து கழகமானது, வார இறுதி நாட்களில் பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்தில் சிரமம் ஏற்படாத வண்ணம் இருக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், வெள்ளிக்கிழமை வார இறுதி நாளான இன்று (நவம்பர் 3) வெளியூரில் உள்ள மக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள்.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு 300 பேருந்துகளும், மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 300 பேருந்துகளும் என வழக்கத்தை விட 600 சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க உள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.