தமிழக அரசு, ஏற்கனவே அறிவித்திருந்த 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இது தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ் நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக ஏற்கனவே மே 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து இன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை.
மேலும் நியாயவிலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உணவுத்துறையும் கூட்டுறவுத்துறையும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த தொகுப்பில் கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, புளி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் மற்றும் துணி சோப் ஆகியவை அடங்கும்.
இதனால் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் என்று எதிர்பாக்கப்டுகிறது. இந்த முழு ஊரடங்கின்போது பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!