தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இதற்கு காலக்கெடு இன்னும் 1 வாரம் தான்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

0
மாநிலம் முழுவதும் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை - கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!
தமிழக பள்ளிகளுக்கு பொது விடுமுறை - அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை ஏப்ரல்  25ம் தேதி முதல் மே 2ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனாவின் 3ம் அலை பரவலுக்கு பின் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கல்வியாண்டு கட்டாயம் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். இதனையடுத்து, மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வருகிற ஏப்ரல்  25ம் தேதி முதல் மே 2ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, இதற்கான மதிப்பெண் பட்டியல் மே 4ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை அந்ததந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம் வர்மா, தனது சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here