தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.1,500 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். நடப்பாண்டில் இந்த தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தேர்வு எழுத ஆர்வமுள்ள 11ஆம் வகுப்பு மாணவர்கள், https://apply1.tndge.org/dge-notification/TTSE என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை செப்டம்பர் 20ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு., இந்த தவற மட்டும் செஞ்சிடாதீங்க!!!