
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் “முதலமைச்சரின் திறனறிவு” தேர்வினை தி.மு.க. தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாதம் ரூ.1,000 என ஆண்டுக்கு ரூ.10,000 வரை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் செப்டம்பர் 23ஆம் தேதி திறனறிவு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கிடையில் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற இருப்பதால், திறனறிவு தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30ஆம் தேதி திறனறிவு தேர்வு நடத்துவதற்கான ஆணையை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராம வர்மா அனுப்பி வைத்துள்ளார்.
மக்களே உஷார்., இந்த பகுதிகளில் நாளை மின்தடை.., மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!