தமிழ் நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது பற்றி அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்ததை அடுத்து கடந்த 1 ஆம் தேதி முதல் ஒன்பது, பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்புசி செலுத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. விரிவான நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் மாநில அரசால் வெளியிடப்பட்டது.
ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே சில மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதிப்பிற்கு உள்ளான மாணவர்கள் நோய்யில் இருந்து மீண்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் மீதமுள்ள வகுப்புகளுக்கு அதாவது ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முக்கிய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். அதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பு முடிவை குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்