சென்னையில் மெட்ரோ சேவையின் முதல் கட்ட கட்டுமான பணி முடிவடைந்து விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பயணிகளின் கோரிக்கைக்கேற்ப பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் காலை 5 மணி முதல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் இரவு 11 மணியளவில் நிறுத்தப்படுகிறது. ஆனால் சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த முடியவில்லை. எனவே நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ அதிகாரி கூறுகையில், “பயணிகளின் வசதிக்காக அலுவலக நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகிறது. கூடிய விரைவில் இரவு 11 மணி வரை இயக்கப்படுவதை நள்ளிரவு வரை நீட்டிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.” என தகவல் தெரிவித்துள்ளார்.