நாடு முழுவதும் ரயில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வசதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பயணிகள் விரைவான பயணங்களை மேற்கொள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை to கோவை மற்றும் சென்னை to மைசூர் என இரண்டு ரயில்கள் உள்ளன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் சென்னை to மைசூர் வந்தே பாரத் ரயிலில் நேர மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன் கூட்டியே ரயில் நிலையங்களை சென்றடையும் என குறிப்பிட்டுள்ளனர். இதுபோக ரயில் எண்.12840 ஹௌரா சூப்பர் பாஸ்ட் ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 07.15 மணிக்கு புறப்பட இருந்தது.
இனி இரவு 07.20 மணிக்கு தான் புறப்படும். இந்த புதிய நேர மாற்றங்கள் வருகிற மே 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.