தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள், பொங்கலுக்கு மோத உள்ளதாக நியூஸ் வந்த வண்ணம் உள்ளது.
வாரிசு-துணிவு;
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்றே கூறலாம், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய அளவில் வெற்றியடைந்து வருகிறது. வருடம் தோறும் இவர்களின் படங்கள் தீபாவளி பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும், இருப்பினும் இந்த வருடம் எதிர்பாராத விதமாக ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் தளபதி விஜய்யின் புதிய படமான ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வருகிறது.மேலும் இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் அஜித் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. முன்னதாக ‘துணிவு’ தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங், வரும் அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போவதாகவும் செய்திகள் லீக் ஆகி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அதிகாரபூர்வமாக தேதி வெளியிட்டால் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.