விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடப்பாடி தான் தமிழக முதல்வர். துணை முதல்வர் அமித்சா என அதிரடியாக பேசியுள்ளார் அவர்.
திருமாவளவன்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பரப்புரையில் தேர்தல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சிகளும் எதிர்கட்சிகளுடைய பலவீனத்தை பற்றி பேசி தங்கள் கட்சிக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கட்சியினர், அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்றும், தமிழகத்தை சீரமைப்போம் என்றும் பேசி வருகின்றனர். அதே போல அதிமுக கட்சியும், திமுக பொய் சொல்லுகிறது. திமுக விவசாயிகளை எதிர்க்கிறது. நான் விவசாயிகளுக்காக நல்லது செய்கிறேன் என பேசி வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாய் சேகர் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல் வடிவேலு – இணையத்தில் கசிந்த தகவல்!!
அதே போல ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையை கொடுத்து வருகிறது. இப்படி இருக்க விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாபநாசம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திருமாவளவன் அதிமுக அரசை குற்றப்படுத்தி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் அதிமுக, பாஜக அரசு பற்றி அமமுக, மநீம போன்ற கட்சிகள் பேசுவது கிடையாது. எடப்பாடி தான் தமிழக முதல்வர். ஆனால் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அல்ல, அமித்சா என கூறியுள்ளார் திருமாவளவன்.