பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு- சோகத்தில் ரசிகர்கள்!!

0

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான திசாரா பெரேரா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திசாரா பெரேரா:

கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினார் திசாரா பெரேரா. இவர் இதுவரை விளையாடிய போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்களை குவித்த அசத்தினார். இந்த சாதனையால் இவர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தன பக்கம் ஈர்த்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச போட்டியில் 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்து அசத்தினார். இந்த சாதனையை படைத்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார் பெரேரா. 32 வயதான பெரேரா இதுவரை 166 ஒரு நாள் போட்டிகள் , 84 டி 20 போட்டிகள் மற்றும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் இதுவரை 7 உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக மலர்ந்துள்ளது – எல்.முருகன் பெருமிதம்!!

மேலும் இவர் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் இலங்கை அணி வென்ற பொழுது அந்த அணியில் இவர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here