நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது இது சீனாவின் உயிரியல் போர் திட்டம் என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
உயிரியல் போர் திட்டம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றானது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை பெரும்பாலான நாடுகள், மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பலகோடி உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸ் குறித்து அமெரிக்க டாக்டரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் செல்லின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது குறித்து அவர் கூறியதாவது , இது, ‘பயோவார்’ எனப்படும், உயிரியல் போர் ஆகும். இது சீனாவின் ஒரு திட்டமாகும். இதற்கு, அதன் ராணுவம் தான் முழு காரணம். கொரோனா பரவலால், உலக நாடுகள் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், சீனா மட்டும் அமைதிகாத்து வருவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.