புரட்டாசி என்றாலே தெய்வீகம் தான். அந்த மாதத்தில் பல அசைவ பிரியர்களும் அசைவத்தை துறந்து கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்வர். அவ்வாறு பிராத்திக்கும் நேரத்தில் கடவுளுக்கு ஏதாவது நைவேத்தியம் வைத்து படைத்தால் நினைத்தது எல்லாம் கிடைக்கும். மேலும் கடவுளின் ஆசியை பெற்று விடலாம். இந்நிலையில் நாம் இந்த பதிவில் திரளி இலை அல்லது பிரியாணி இலை கொழுக்கட்டை எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய் – 4
வறுத்த பாசிப்பருப்பு – 1/4 கப்
திரளி இலை அல்லது பிரியாணி இலை – 15
சுக்கு – சிறிதளவு
தேங்காய் துருவல் – 1/2 கப்
செய்முறை:
முதலில் வறுத்த பச்சரிசி மாவு, சீவிய வெல்லம், வறுத்த பாசிப்பருப்பு,பொடித்த ஏலக்காய், சுக்கு மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதன் பின்னர் சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து கொண்டு பிரியாணி இலையை விரித்து அதில் ஒன்று அல்லது இரண்டு கொழுக்கட்டைகள் வீதம் வைத்து கொண்டு, இட்லி கொப்பரையில் வைத்து அவித்து எடுக்கொள்ளவேண்டும். தற்போது சூடான சுவையான பிரியாணி இலை கொழுக்கட்டை தயார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்