“தடுப்பூசி தட்டுப்பாடு என்பது இல்லை” – அனைவருக்கும் தடுப்பூசி உறுதி!!!

0

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; டிசம்பர்க்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அனைவருக்கும் தடுப்பூசி  ஐ சி எம் ஆர்:

இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சரிந்து வருகிறது.  தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் சதவிகிதம் 92 சதவிகிதமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பூசி தொடர்ந்து அனைவரும் போட்டுக்கொண்டால்; பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் வந்துவிடும்.

இது குறித்து பல்ராம் பார்கவா கூறியபோது; ஜுலை மாத பாதிக்குப் பிறகு அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு போதுமான அளவு டோஸ்கள் கிடைக்கும் என்றும் டிசம்பர் மாதத்திற்குள் ஒட்டு மொத்த பேருக்கும் தடுப்பூசி போட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேலும் நாடு முழுவதும் 1.67 கோடி  சுகாதார பணியாளர்கள், 2.42 கோடி முன்கள பணியாளர்கள், 15.48 கோடி , 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 21.60 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.” என்றும் கூறினார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here