ஐயோ.., சுடர் தான் என் குழந்தையா?? மகளை கண்டறியும் வெற்றியின் நெகிழ்ச்சி தருணம்.., தென்றல் வந்து என்னை தொடும்!!

0
ஐயோ.., சுடர் தான் என் குழந்தையா?? மகளை கண்டறியும் வெற்றியின் நெகிழ்ச்சி தருணம்.., தென்றல் வந்து என்னை தொடும்!!
ஐயோ.., சுடர் தான் என் குழந்தையா?? மகளை கண்டறியும் வெற்றியின் நெகிழ்ச்சி தருணம்.., தென்றல் வந்து என்னை தொடும்!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது சுடர் தான் தனது மகள் என்ற உண்மையே தெரியாமல் அதிக பாசத்துடன் பழகி வருகிறார் வெற்றி. அபி ஒருபக்கம் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்று அலைந்துகொண்டிருக்கிறார். அபியும், வெற்றியும் அடிக்கடி சந்தித்து கொண்டாலும் அது மோதலில் தான் போய் முடிகிறது.

அதாவது வெற்றி அபி தனது குழந்தையை கொன்று விட்டாள் என்ற கோவத்தில் உள்ளார். அபியும் சுடர் இருக்கும் விஷயத்தை சொல்லவே இல்லை.  இப்பொழுது அபியும், சுடரும் காரில் வெளியே சென்றுகொண்டிருக்க எதிரிகளின் சதியால் விபத்துக்குள்ளாகின்றனர். சுடரும் அபியும் பலத்த காயத்துடன் மயங்கி கிடக்கின்றனர். இந்த ப்ரோமோ வைரலானது.

மேலும் சுடருக்கு விபத்து நடந்த விஷயத்தை தெரிந்து வெற்றி கதறிக்கொண்டுள்ளார். இந்நிலையில் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது சுடரை பார்க்க சென்ற இடத்தில் தான் வெற்றிக்கு உண்மை தெரியுமாம். சுடர் தனது மகள் என்று தெரிந்ததும் கண்கலங்கி நெகிழ்ச்சியடைவாராம். அதன் பிறகு அபியை பழையபடியே காதலிக்கவும் ஆரம்பிப்பாராம். சுடருக்காக குடி பழக்கத்தை விட்ட வெற்றி அதன் பிறகு ரௌடி தனத்தையும் விட்டு விட்டு திருந்த முயற்சி செய்வாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here