தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது பல த்ரில்லிங்கான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது அபியை கடத்தி வில்லன்கள் நடுக்கடலில் வீசுகின்றனர். அப்பொழுது சரியான நேரத்தில் வந்து வெற்றி காப்பாற்றுகிறார்.
சுடரின் வார்த்தைக்காக வெற்றி இவ்வளவும் செய்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, இனிமேல் தான் ஒவ்வொரு விஷயமும் வெற்றிக்கு தெரியவர போகிறது. அதாவது அபியும், வெற்றியும் கடலுக்கு நடுவில் சிக்கிக்கொண்டுள்ளனர். இருவரும் சண்டை போட்டுக்கொண்டாலும் மனசு விட்டு பேசவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
சுடர் பற்றிய உண்மைகளும் வெளிவர வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்திற்காக அபியை இந்த நிலைமைக்கு தள்ளி விட்டுட்டோமே என்று அவருக்கு குற்ற உணர்ச்சி வருமாம். மேலும், அபியை சமாதானம் செய்வது தான் இனிமேல் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக போகிறது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இனி வரும் எபிசோடுகளுக்காக காத்து கொண்டுள்ளனர்.