விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். இதில் சுடரின் பாதுகாப்பிற்காக அபியின் வீட்டில் இருந்து வந்த வெற்றியை அபி வெளியேற்றி விட்டார். ஆனால் சுடர்க்கு வெற்றி மீது இனம் புரியாத ஒரு பாசம் இருந்து வரும் நிலையில் அவளால் வெற்றியை மறக்க முடியவில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
எப்படியாவது சிம்பா மீண்டும் தன் வீட்டுக்கு வரவேண்டும் என நினைக்கிறார். இதை அவ்வப்போது தன் அம்மாவிடம் கூறியும் வருகிறார். ஆனால் இதையெல்லாம் அபி கொஞ்சம் கூட கண்டுகொள்வதில்லை. இப்படியான நிலையில் இந்த சீரியலின் நியூ ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அபியிடம் எனக்கு இருக்கும் ஒரே friend சிம்பா தான், ஆனால் இப்போது அவனை என்னால் பார்க்க முடியவில்லை என சொல்லி சுடர் கவலைப்படுகிறார்.
ஐ லவ் யூ டார்லிங்.., வனிதாவின் மாஜி கணவர் போட்ட வைரல் பதிவு.., ஒருவேளை அவங்களுக்காக இருக்குமோ?
மேலும் வெற்றி ஒரு கொலைகாரன் அவன் கூட நீ பேச கூடாது என தருண் சொல்ல, இல்லை அவன் ரொம்ப நல்லவன் என்று சுடர் கூறுகிறார். மேலும் சிம்பா ஒரு கொலைகாரனா என தெரிந்து கொள்வதற்காக யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சுடர் கிளம்புகிறார் . இதன் பிறகு சுடரை தேடிய அபி அவரை காணவில்லை என பதறி போவது போன்ற காட்சிகளுடன் இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.