தீப்பெட்டி கணேசனுக்கு அப்படி என்ன தான் நடந்துச்சு – கதறும் குடும்பம்!!

0

காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசனின் மரணம் பலரையும் பாதித்துள்ள நிலையில் தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யும் வேளையில் திடீர் என்று இறந்துள்ளார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

தீப்பெட்டி கணேசன்

திரையுலகில் தற்போது தொடர்ந்து பல மரணங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது. சினிமா துறையில் வாய்ப்பில்லாமல் வறுமையில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தீப்பெட்டி கணேசனின் இந்த மரணம் பலரையும் உலுக்கியுள்ளது. ரேணி குண்டா படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் கணேசன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்தடுத்து பில்லா 2, நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று என பல படங்களில் நடித்திருந்தார். திடீரென அவருக்கு படவாய்ப்புகள் குறைந்ததால் வீட்டில் வறுமை நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர். ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த கணேசனை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நாளை டிஸ்சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

பிரசாந்த் படத்தில் இணைந்த நடிகை பிரியா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்!!

வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே துணை நடிகர் தவசி கஷ்டப்பட்டிருக்கும் போது யாரும் உதவவில்லை என்று துணை நடிகை ஒருவர் கூறியிருந்தார். அப்பொழுதே தீப்பெட்டி கணேசனும் கஷ்டப்படுவதாக கூறியிருந்தார் அவர். தற்போது அவரும் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்த நடிகருமேவா அவருக்கு உதவ முன் வரவில்லை என்பது கேள்வியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here