தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த தீப்பெட்டி கணேசன் என்பவர் தற்போது உடல்நல குறைவினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தீப்பெட்டி கணேசன்
திரையுலகை பொறுத்தவரை ஒருவர் எந்த அளவிற்கு பிரபலமானாலும் திடீரென காணாமலும் போய்விடுவார். போன வருடத்தில் கூட எதிர்பாராத விதமாக பிரபல காமெடி நடிகர் தவசி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் உதவி கேட்டு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். இதனால் பல பிரபலங்கள் அவருக்கு உதவி செய்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தவசி உயிரிழந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இதே போல மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரேணி குண்டா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். இவர் தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, கோலமாவு கோகிலா, சீனுசாமி போன்ற திரைப்படங்களில் நடித்தவர். சில நாட்களாகவே உடல்நல குறைவினால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கொரோனா பரவல் எதிரொலி – மநீம கட்சி வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி!!
தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. திரையுலகை சேர்ந்த யாரும் அவருக்கு எந்த உதவியும் செய்ய வில்லை என்று துணை நடிகை ஒருவர் ஏற்கனவே பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் இவரது மரணம் பலரையும் வேதனைக்குள்ளாகியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.