தமிழகத்தில் திரையரங்கம், டாஸ்மாக் மூடல்?? உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இதனை முன்னிட்டு தற்போது தமிழகத்தில் திரையரங்கம் மற்றும் தியேட்டர்களை மூட உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரியவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் அனைவரையும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் வந்ததால் திரையரங்கம் மற்றும் டாஸ்மாக் ஆகியவற்றை திறக்கப்பட்டது. இருந்தாலும் கூட தற்போது வரை திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வேகமெடுத்து வருவதால் திரையரங்கம் மற்றும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதிமுக பாமக இடையே மோதலா??வன்னியர் இடஒதுக்கீடு குறித்த புதிய சர்ச்சை!!

தற்போது இது குறித்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு பதிவு செய்துள்ளார். அதன்படி அவர் கூறியாதவது, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக தமிழகத்தில் திரையரங்கம் மற்றும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று மனு வழங்கியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here