கடந்த 30 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் சோமாலியாவில் இன்று திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்வுடன் தியேட்டரில் அமர்ந்து படங்களை பார்த்து ரசித்தனர்.
திறக்கப்பட்ட திரையரங்கம் :
கடந்த 1991-ஆம் ஆண்டிலிருந்தே வன்முறை மோதல்கள், உள்நாட்டு போர் மற்றும் உணவு பஞ்சத்தால் தவித்து வரும் சோமாலிய நாடு, மக்கள் வாழ தகுதி இல்லாத நாடு என்ற அளவிற்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இங்கு அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை நடத்தி வந்தது. இதனால் நாட்டில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, மூடப்பட்ட திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டன.
இதனை அடுத்து, திரையரங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்த படத்தை சினிமா கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் பார்த்து மகிழ்ந்ததோடு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்