பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைப்பு – பள்ளி கல்வித்துறை முடிவு..!

0

மஹாராஷ்டிராவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா அரசு ஒப்புதல்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம் என மகாராஷ்டிரா கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மஹாராஷ்டிரப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், மேலும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் ஜூன் 15ம் தேதி முதல் மாணவர்கள் கல்வி கற்பதற்கான மாற்று வழிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here