கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூறுக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளை ஷாருக் சைஃபி என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 9 பேர் பலத்த காயமடைந்திருந்தனர். மேலும் இந்த குற்றத்தை செய்த இளைஞர் ஷாருக் சைஃபி மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த வழக்கில் இவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுப்பதற்காக இவரது நண்பர் முகமது மோனிஸ் என்பவர் அவரது தந்தையுடன், கொச்சியில் கடவந்திரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இதை தொடர்ந்து முகமது மோனிஸ் NIA சிறப்பு நீதிமன்றத்திற்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இத்தாலியை வீழ்த்திய இந்திய அணி.., பைனலுக்கு முன்னேறி அசத்தல்.., தங்கப்பதக்கம் கைகூடுமா??
அந்த நிகழ்வை நேரில் பார்த்ததற்கான சாட்சியாக இருந்த அவரது தந்தை, விடுதியின் குளியல் அறையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்த போலீசார், மோனிஸின் தந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் முகமது மோனிசை காவலில் எடுத்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.