அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் மூலம் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த அறிவிப்பு 20 ஆண்டு காலமாக பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடைநிலை ஆசிரியர்கள் பலரும் பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். உச்சபட்சமாக ஜூலை 14ம் தேதி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்து உள்ளனர்.
இதில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தகுதி என்பதை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர்.