உலக கோப்பையில் நிகழ்ந்த சோகம்.. கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!

0
உலக கோப்பையில் நிகழ்ந்த சோகம்.. கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!
உலக கோப்பையில் நிகழ்ந்த சோகம்.. கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!

இந்தியாவில் 2023 உலக கோப்பை தொடர் மிக சிறப்பாக அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 6) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு பங்களாதேஷ் பதிலடி கொடுத்துள்ளது. மறுபக்கம் இந்த உலகக் கோப்பை 2023ல் இருந்து இலங்கை வெளியேறியது.

Enewz Tamil WhatsApp Channel 

இதற்கிடையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் எதிரொலியாக இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக நீக்கியுள்ளார். ஆனாலும் நாளை மறுநாள் பெங்களூருவில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 41வது லீக் போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here