இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று ஜூலை 24 தகவல் தெரிவித்துள்ளது.
விரைவில் இடைத்தேர்தல்..!
இந்தியாவில் தமிழகம், பீஹார், உத்தரப் பிரதேசம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போது திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு 6 மாத கால அவகாசம் என்ற விதிமுறைகளின்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட இருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை திட்டமிட்டிருந்த தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் நேற்று ஜூலை 23 தகவல் வெளியிட்டிருந்தது.
தமிழக தொழிலாளர்களுக்கு 1 மாதத்திற்கான இ – பாஸ் – தமிழக அரசு முடிவு..!
இந்நிலையில் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து விரைவில் காலியாக உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷேபள்ளி சரண் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் இடைத்தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Decision to hold bye-elections in Assembly and Parliamentary Constituencies was taken by the Commission after a review today. The schedule etc. shall be announced at an appropriate time.
— Sheyphali Sharan (@SpokespersonECI) July 24, 2020