வீட்டு உரிமையாளர்கள் சிலர் அடிக்கடி வாடகையை உயர்த்துவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் படி இனி வீட்டின் உரிமையாளர்களுக்கு 2 மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
அமலுக்கு வருகிறது புதிய வாடகை சட்டம்:
வாடகைதாரர் மற்றும் வீட்டின் உரிமையாளருக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில், புதிய வாடகை நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
அதன்படி இரண்டு மாதங்களுக்கு மேல் அட்வான்ஸ் வாங்க முடியாது. வாடகை ஒப்பந்த நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம் 2019ன் கீழ் கட்டாயம் ஆக்கியுள்ளது. அரசின் இந்த சட்டத்தால் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வீட்டு உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் வாங்க கூடாது. வாடகை ஒப்பந்த நகலை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் அப்லோடு செய்யலாம்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!