ஏழு அதிசயங்களை கடந்து எட்டாத உயரத்தில் தஞ்சை பெரிய கோயில் – மத்திய இணை அமைச்சர் புகழாரம்!!

0

தஞ்சை பெரிய கோயில், உலகின் ஏழு அதிசயங்களை கடந்தும் பல சிறப்புகளை பெற்று கம்பீரமாக உயர்ந்து நின்று தமிழரின் பெருமையை பறைசாற்றுவதாக மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெரிய கோயிலின் பெருமைகள்:

ராஜராஜ சோழனின் பெருமைகளை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் பறைசாற்றி வரும் தஞ்சை பெரிய கோயில் ஒரு மிக பெரிய பொக்கிஷமாக திகழ்ந்து வருவதாக மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் உலகின் ஏழு அதிசயங்களிலும் இல்லாத பெருமை இந்த கோவிலுக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், கடந்த அறுபது ஆண்டு காலத்தில், தேசத்தின் பல பெருமை மிகு கோயில்களையும், பல்வேறு புராதன சின்னங்களையும் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளில் மீட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த தகவல்களை எல்லாம் தஞ்சை பெரிய கோவிலில்  நேற்று வராஹி அம்மன், பெருவுடையாரை தரிசனம் செய்து வழிபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here