
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் தான் நினைத்ததை நடத்தி விட்டோம் என்ற ஆணவத்தில் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் தமிழ் அடுத்து என்னென்ன பிரச்சனை செய்யப் போகிறார் என்ற பயத்தில் அர்ஜுன் இருக்கிறார். இப்படி இருக்கையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கோதையின் சொத்தை முழுசாக தன் பெயருக்கு மாற்றிய அர்ஜுன் கம்பெனியில் முழு அதிகாரத்தை தன் கையில் எடுப்பாராம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எந்த சீரியலும் செய்யாத சாதனையை படைத்த எதிர்நீச்சல்.., அப்படி என்னவா இருக்கும்.., லீக்கான அப்டேட்!!!
மேலும் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பாராம். அர்ஜுன் கோதைக்கு செய்த துரோகத்தை நினைத்து ஊழியர்கள் அனைவரும் இனி உனக்கு கீழ வேலை பாக்க முடியாது. நாங்க இந்த கம்பெனிய விட்டு இப்பவே கிளம்புறோம் என்பார்களாம். மேலும் இவர்கள் தமிழின் கம்பெனியில் சேர்வார்களாம். இதனால் அர்ஜுனுக்கு கம்பெனியில் மிகப்பெரிய லாஸ் ஏற்படுமாம். இதை வைத்து தமிழ் இனி அடுத்தடுத்து அர்ஜுனுக்கு பிரச்சனை கொடுப்பாராம்.