
கொஞ்சம் கூட விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பறக்கும் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது தமிழும் சரஸ்வதியும் சீரியல். தற்போது இதில் அர்ஜுனின் உண்மை முகம் கோதை குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் வழக்கம் போல அர்ஜுன் தன் தந்திரத்தால் ராகினியை கோதைக்கு எதிராக திருப்பி விட்டார். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் அர்ஜுன், உங்களின் மொத்த சொத்தும் இப்பொழுது ராகினி பெயரில் இருக்கிறது என கூறுகிறார். மேலும் பத்திரத்தை வாங்கி பார்த்த கார்த்தி, ஐயோ எல்லா சொத்தும் ராகினி பெயரில் இருக்கிறது என கூற, அதை கேட்டு ஷாக்கான நடேசன் அர்ஜுனின் காலரை பிடித்து உன்னை உயிரோட விட மாட்டேன்டா என சொல்லி சண்டை போடுகிறார். அப்போது ராகினி அவர் கையை தட்டி விட்டு, அவர் அப்படி என்ன தப்பு பண்ணி விட்டார் என கேட்கிறார்.
அதற்கு கோதை ச்சீ., உங்களுக்கெல்லாம் இந்த சொத்து தானே முக்கியம், நீ எல்லாம் என் மகளா என ராகினி பார்த்து கோபமாக கேட்கிறார். மேலும் இந்த சொத்தை எல்லாம் நீங்களே வைத்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு, வீட்டு வாசலில் குடும்பத்துடன் வந்து நிற்கின்றனர். இப்படியான காட்சிகளுடன் இந்த ப்ரோமோ அமைந்திருந்தது.