சென்னையில் நாளை நடைபெற இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட இருக்கிறது.
இசை நிகழ்ச்சி
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பது உண்டு. அந்த வகையில், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த ஆண்டு IPL போட்டியில் RCB தான் வெல்லும்….,முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து….,
இவரது, இசை நிகழ்ச்சிக்கு பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது உண்டு. அந்த வகையில், சினிமாவில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்களின் நலனுக்காக ‘Wings of Love’ என்ற பெயரில் இசை கச்சேரியை ஏ.ஆர்.ரஹ்மான் நாளை (மார்ச் 19) நடத்த இருக்கிறார். இந்த நிகழ்வில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.